தமிழகம்

ஓடையில் பெண் சடலத்தை புதைக்க முயற்சி.. திரண்டு வந்த போலீஸ் : கோவையில் பரபரப்பு!

கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்து உள்ள வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெய்தீன் பீபி (90). இவர் உடல நலக்குறைவால் தனது வீட்டில் இன்று இறந்து உள்ளார்.

இவரது உறவினர்கள் காளிபாளையத்தில் மயானம் என்று கூறப்படும் இடத்தில் உடலை அடக்கம் செய்ய குழி தோண்டி உள்ளனர். அந்த மயானம் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு இடம் என்றும், இந்த இடத்தில் உடலை புதைக்க கூடாது என்றும் அரசு வருவாய் துறையினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள், தோட்ட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து குழியை மூட வேண்டும் என்று கூறினர்.

இதையும் படியுங்க: முதல் நாளே இத்தனை கோடி வசூலா? மிரட்டி விட்ட புஷ்பா 2.!!

மேலும் இந்த இடத்தை நடைபாதையாக உபயோகித்து கொள்ள முடியுமே தவிர இறந்தவர்கள் உடலை புதைக்க அனுமதிக்க முடியாது என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். ஆனால் அங்கு இருந்த இஸ்லாமிய மக்கள் இந்த இடத்தில் தான் பல வருடங்களாக இறந்தவர்களின் உடலை புதைத்து வருவதாக தெரிவித்தனர். இதனால் இந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு வந்த அன்னூர் தாசில்தார், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் இஸ்லாமிய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்து அங்கு இந்து முன்னணியை சேர்ந்தவர்களும் திரண்டதால் பதட்டம் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

3 minutes ago

சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?

சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…

4 minutes ago

பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!

ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…

35 minutes ago

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

1 hour ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

16 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

17 hours ago

This website uses cookies.