Categories: தமிழகம்

அதே நேரம் அதே இடம்.. அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி : அரசியல் பிரமுகர்களை குறி வைக்கும் காஞ்சிபுரம் கும்பல்!!

அதே நேரம் அதே இடம்.. அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி : அரசியல் பிரமுகர்களை குறி வைக்கும் காஞ்சிபுரம் கும்பல்!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் வயது 35. தொழில் அதிபரான இவர் அதிமுக கட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளராக உள்ளார். இவர் மனைவி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

இந்நிலையில் நேற்று மோகன் ஸ்ரீபெரும்புதூர் – ஒரகடம் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் மோகன் வந்த காரை வழிமறித்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொலை செய்ய முயன்றனர். தன்னை தாக்க மர்ம நபர்கள் முயன்ற போது சுதாரித்து கொண்ட மோகன் அவர்களிடமிருந்து லாவகமாக தப்பி சென்றார்.

இது குறித்த தகவலின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தப்பி ஓடிய மர்ம நபர்களை குன்றத்தூர் சாலையில் மடக்கி பிடித்தனர். போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் தடுக்கி விழுந்து கை கால்களில் முறிவு ஏற்பட்டது என கூறப்படுகிறது .

பிடிபட்ட நபர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த குமரேசன் வயது 30, அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் வயது 28, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த அபிஷேக் வயது 20 என்பது தெரிய வந்தது.

ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் மூன்று பேரையும் கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கிளாய் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி நாகராஜ், பாஜகவை சேர்ந்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பிபிஜிடி.சங்கர் மற்றும் எச்சூரை சேர்ந்த திமுக பிரமுகர் ஆல்பர்ட் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து அதிமுக பிரமுகரும், தொழிலதிபருமான போந்தூர் மோகனை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

11 minutes ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

16 minutes ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

59 minutes ago

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

2 hours ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

3 hours ago

திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…

3 hours ago

This website uses cookies.