திருவண்ணாமலை: கலசபாக்கம் அருகே முன்விரோதம் காரணமாக மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள சொரகொளத்தூர் கிராமத்தில் வசிப்பவர் சரண்ராஜ். இவர் மீதான முன்விரோதத்தால் ஏழுமலை என்பவர் இவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, இரவில் மாட்டுக்கொட்டகையில் உறங்கி கொண்டிருந்த சரண்ராஜ் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதன்படி, சரண்ராஜ் மீது ஏழுமலை மின்சாரத்தை பாய்ச்சி கொல்ல முயன்ற போது,அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரை காப்பாற்ற வந்த ரேணுகோபால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதில், ஏழுமலை, ரேணுகோபால் இருவரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.