இலங்கைக்கு கடத்த இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுறாமீன் துடுப்பு, மற்றும் கடல் அட்டைகள், பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த சல்லிதோப்பு கடற்கரை பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இலங்கைக்கு கடத்துவதற்கு தயார் நிலையில், படகில் ஏற்றப்பட்டு இருந்த எட்டு மூட்டைகளில் சுறா மீன் துடுப்புகள் எனப்படும் சுறாபீலிகளுடன் படகு புறப்பட தயாராக இருந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில், விஜய் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சுமார் 22 மூடை கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக மூன்று ட்ரம்களில் பெட்ரோல், டீசல் போன்றவையும் இருந்ததையடுத்து அவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அந்த தோட்டத்தில் இருந்த காவலாளிகள் செல்வம் மற்றும் ரஞ்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தென்னந்தோப்பு உரிமையாளர் விஜய் ஆனந்தை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை க்யூ போலீசார் கீழக்கரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.