கோவையில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை வட்டாட்சியர் கையகப்படுத்த முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை அடுத்த மயிலேறியம்பளையத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் திருக்கோயில் உள்ளது. இதனை சுற்றி கோவிலுக்கு சொந்தமான பட்டாவுடன் கூடிய இடமும் உள்ளது.
இந்த கோவிலை அந்த ஊரை சேர்ந்த மக்கள் தங்களது காவல் தெய்வமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு திடீரென வந்த வட்டாட்சியர் கோவிலை மட்டும் விட்டுவிட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முற்பட்டு நோட்டிஸ் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலின் முன்பு திரண்டனர். இதனையடுத்து அங்கு வந்த ஊராட்சி தலைவர், கவுன்சிலர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வரும் காந்திஜெயந்தி அன்று நடைபெற இருக்க கூடிய கிராமசபை கூட்டத்தில் கோவில் நிலம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதன் பின் பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
பழமையான கோவிலுக்கு சொந்தமான இடங்களை பல நூறு ஆண்டுகளாக பொது மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென கையகப்படுத்த முற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.