கோவை: கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, சாலையில் நடந்து வரும் பொழுது அவரை தாக்குவதற்காக ஒரே பைக்கில் வந்த மூன்று பேர் கும்பல் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை 30ஆம் தேதி கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் அருகே பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அசோக் ஸ்ரீநிதி மரித்து தாக்க முற்பட்டனர். உடனடியாக அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே அசோக் ஸ்ரீநிதி கொடுத்த புகாரின் பேரில், காவல்துறை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை கமிஷனர் அலுவலகத்தில் கொடுப்பதற்காக இன்று அசோக் ஸ்ரீநிதி வந்திருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனம் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை ஏமாற்றி, 2451 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தொடர்பாக பலமுறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறினார். அவர்கள் வாங்கிய சொத்துக்கள், பணப்புழக்கம் குறித்து ஆதாரத்துடன் புகார் கொடுத்தும், இதுவரை சட்டப்படி முடக்காமல் காவல்துறை இழுத்து எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே, தான் தனக்கு பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், அன்றைய தினத்தில் ஒரே இருசக்கரத்தில் வந்த மூன்று நபர்கள், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து தன்னை குத்த வந்ததற்கு முன், தான் தப்பித்து சென்றதாக தெரிவித்தார். இவ்வளவு நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும், இதுவரை காவல் துறை ஏன் அவர்களை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். தனக்கு எது நடந்தாலுமே அதற்கு மை வி3 நிறுவனம் தான் காரணம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.