எனக்கும் மாமுல் கொடுங்க மணல் கொள்ளையர்களிடம் ஒன்றிய கவுன்சிலர் பேரம் பேசிய ஆடியோ வைரலான நிலையல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் ஒரு அரசியல் கட்சியில் இருந்த இவருக்கு அக்கட்சியில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட சீட் தரவில்லையாம். இதனால் கட்சியில் இருந்து விலகிய அவர் சுயேட்சையாக போட்டியிட்டு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அக்ராவரம், மீனூர் மலை, தட்டப்பாறை, பெரும்பாடி ஆகிய பகுதிகளில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இது தொடர்பாக மணல் கொள்ளையர்களுடன் ஒன்றிய கவுன்சிலர் சரவணன் மாமுல் கேட்பது போன்ற ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் ஒவ்வொரு முறை மணல் கடத்தும் போது போலீசாருக்கு மட்டும் மாமுலை வாரி தருகிறீர்கள். ஆனால் நாங்கள் பல லட்சம் செலவு செய்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளோம். எங்களை கண்டு கொள்வதே இல்லை.
இங்கு நடக்கும் மணல் கொள்ளை தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் என்னைத்தான் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள். எனவே மாமுலில் எனக்கும் பங்கு கொடுங்கள் என பேசி உள்ளார்.
இந்த ஆடியோ தற்போது குடியாத்தம் பகுதியில் பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அறிந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி ஆடியோவில் பேசுவது ஒன்றிய கவுன்சிலர் சரவணனா? அல்லது அவரைப் போல் வேறு யாராவது பேசியுள்ளார்களா? இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறார்.
மேலும் இதுகுறித்து மணல் கொள்ளையர் சின்னத்தம்பி என்பவரிடம் குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் கொள்ளையரிடம் மாமூல் கேட்டு கொள்ளைக்கு துணை போகும் வகையில் பேசிய கவுன்சிலரின் ஆடியோ ஓட்டு போட்ட மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.