வேடசந்தூர் அருகே ஆட்டோவும் நூற்பாலை பேருந்தும் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் பரிதாப பலியான சிசிடிவி காட்சி தற்போது வெளியானது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த பூத்தாம்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக, எரியோட்டில் இருந்து வேடசந்தூருக்கு வாடகைக்கு எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் ஆட்டோவை ஓட்டி வந்தார்.
வேடசந்தூர் வந்து விட்டு மீண்டும் எரியோடு நோக்கி செல்லும் பொழுது எதிரே வேடசந்தூர் நோக்கி நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றி வந்த பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் ஆட்டோவில் வந்த அவரது நண்பர் சந்தோஷ்(23) பலத்த காயம் அடைந்தார்.
பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த காயம் அடைந்த சந்தோஷ் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.