தேனி : ஆட்டோ மீது லாரி மோதி விபத்தாகும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
தேனி மதுரை சாலையில் உள்ள பங்களாமேடு பகுதியில் நேற்று பிற்பகல் வந்த ஆட்டோ மீது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த தேனி ஜவஹர் நகரைச் சேர்ந்த கண்ணன், மணிகண்டன், பழனிச்சாமி ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் குமார் மற்றும் பயணிகள் நாகராஜ், கணேசன் ஆகியோர் காயம் அடைந்தனர். விபத்துக்குள்ளான அனைவரும் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதில் தலையில் பலத்த காயமடைந்த கண்ணன், மணிகண்டன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவற்றில் கண்ணன் செல்லும் வழியிலும், மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்ற பிறகும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்ற நான்கு பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த தேனி நகர் காவல்துறையினர் லாரி ஓட்டுநரான ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த கொண்டாரெட்டி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவரை பலிவாங்கிய அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சாலையில் இருந்து தேனி நோக்கி வந்த ஆட்டோ பங்களாமேடு பகுதியில் பழைய டிவிஎஸ் ரோடு பிரிவில் திரும்பும்புகிறது.
அப்போது ப்ரேக் பிடிக்கும் போது நிலை தடுமாறி கவிழும் போது, எதிரே தேனியில் இருந்து மதுரை சாலையில் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. பதபத வைக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.