Categories: தமிழகம்

வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்ட அய்யாகண்ணு.. அமித்ஷா போட்ட உத்தரவா? கொந்தளிக்கும் விவசாயிகள்!

வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் உற்பத்திற்கு இரண்டு மடங்கு லாபம் வழங்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்க கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முழுவதும் விவசாயிகள் இன்று அந்தந்த மாநிலத்தில் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுக்க உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க இருந்த நிலையில், திருச்சி மாநகர காவல்துறையினர் செல்ல விடாமல் வீட்டு காவலில் வைத்துள்ளனர். செய்தியாளர்களை சந்திக்க அய்யாகண்ணு வெளியே வந்த போது
காவல்துறையினர் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அய்யாகண்ணு, எல்லா மாநிலத்தில் உள்ள மாவட்டத்திலும் பிரதமர் மோடி தெரிவித்தபடி வேளாண் விளைபொருட்களுக்கு இருமடங்கு லாபம் தரும் விலை வழங்க வேண்டும், எம்.எஸ்.சாமிநாதன் சொன்ன சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட விதை இறக்குமதி செய்யக்கூடாது. விவசாயி வாங்கிய அனைத்து கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனு அளித்து வருகின்றனர்.

ஆனால் திருச்சியில் மட்டும் காவல்துறையினர் வெளியே விடாதபடி வீட்டு சிறையில் வைத்துள்ளனர். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சென்றால் ரயில்களில் மறிக்கின்றனர். இது அரசியல் சட்டத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானது. இது மனித உரிமை மீறலாகும்.
இது என்ன ஜனநாயக நாடா சர்வாதிகார நாடா.

நாங்கள் போராட்டத்தின் போது பஸ்ஸை மறிக்கிறோமா அல்லது ஏதாவது சேதப்படுத்துகிறோமா. நாங்கள் இப்போது கேட்க விரும்புவது மத்திய அரசை தான். உச்ச நீதிமன்றம் மாதம் தண்ணீர் தர வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

ஆனால், தற்போது தண்ணீர் நிரம்பிய உடன் கர்நாடகா நீரை திறந்து விடுகிறது. தமிழகத்தை வெள்ளம் வடியும் மாநிலமாகத்தான் பார்க்கிறார்கள். தற்போது குருவை சாகுபடி முடிந்து விட்டது.

சம்பா சாகுபடி செய்வதற்கு இன்னும் ஒரு மாதமாகும். இப்போது விடப்படும் தண்ணீர் கடலில் தான் செல்ல போகிறது. இந்த தண்ணீரை திருப்பி அய்யாரில் விட வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதையும் செய்வதில்லை.

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி டெல்லியில் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களை தடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உட்பட பல்வேறு மாநிலங்களில் நாங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளோம். டெல்லியிலும் இதற்கான உத்தரவை பெற்றுள்ளோம்.

வீட்டு காவல் வைத்ததற்கான காரணத்தை குறித்து காவல்துறையிடம் கேட்டபோது
டெல்லியில் அமித்ஷாவிடம் இருந்து விடக்கூடாது என்று உத்தரவு வருகிறது என கூறுகின்றனர். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

8 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

9 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

9 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

9 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

9 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.