கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை தொடர் மழையால் 100 அடியை எட்டியது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 15 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியார் அணைக்கு வரும் நீர் வழி பாதைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
மேலும் குரங்கு அருவியில் ஆர்ப்பரித்து நீர் கொட்டுவதால் ஆழியார் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த உயரமான 120 அடியில் இன்று காலை 98.80 அடி வரை நீர் இருப்பு இருந்தது. வினாடிக்கு 2900 கன அடி நீர் வரத்தாக வந்து கொண்டிருப்பதால் இன்று பிற்பகல் 100 அடியை எட்டியது.
மழைப்பொழிவு இதே நிலை நீடித்தால் இன்னும் சில தினங்களில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணித்துறையினர் அணைப்பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆழியாறு அணை 100 அடியை எட்டியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த டுவிட்டர் செய்தியால் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனரா? என நெட்டிசன்கள் தொடர்ந்து ஏவுகனை கேள்விகள் எழுப்பியதால் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக அடுத்த டுவிட் ஒன்றை லலித் மோடி போட்டு விட்டார்.
அந்த பதிவில், ‘நாங்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் தான் செய்து வருகிறோம். விரைவில் அதுவும் ஒருநாள் நடக்கலாம்’ என லலித் மோடி கூறியுள்ளார்.
கடந்த 2018ல் லலித் மோடி தனது மனைவியை விவாகரத்து செய்திருந்தார். இதே போல சுஷ்மிதா சென் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பாய் பிரண்ட் ரோஹ்மனை பிரிவதாக அறிவித்திருந்தார். அதற்குள் புதிய உறவை சுஷ்மிதா தேடிக்கொண்டுள்ளார். தற்போது லலித் மோடியின் ட்விட்டை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.