புதுக்கோட்டை அருகே தனியார் குவாரிக்கு சொந்தமான கல்குவாரி குளத்தில் குளிக்க சென்ற மூன்று குழந்தை உட்பட தாயென நான்கு பேர் நீரில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் சித்தன்னவாசல் அருகே கூத்தாணிப்பட்டியில் வசித்து வரும் சிவரஞ்சனி மற்றும் அவரது கணவர் பாண்டியன் உள்ளிட்ட நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பாண்டியன் விவசாய வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பாண்டியன் மனைவி சிவரஞ்சனி, கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வருவதாகவும், அடிக்கடி தன்னுடைய மூன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விடுவதாகவும் இருந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் அன்னவாசல் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளத்தில் இயற்கை உபாதைகள் செல்வதற்காக தன்னுடைய இரண்டு மகள்கள் மற்றும் நான்கு மாத கைக்குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். பாறை குளத்தில் திடீரென கால் தவறி குளத்தில் உள்ளே விழுந்து விட்டார். அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு விரைந்து வந்து மூழ்கிய நான்கு பேரையும் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
தகவல் அறிந்த உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் உதவியுடன் பாறை குளத்தில் மூழ்கிய நான்கு பேரில் சிவரஞ்சனி மற்றும் அவருடைய இரண்டு மகள்களையும் மீட்டு உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதில் மூத்த மகள் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், தற்பொழுது தாயும் இரண்டாவது மகளும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நான்கு மாத கைக்குழந்தையை பாறை குளத்தில் தற்போது வரை தீயணைப்புத் துறையினர் பல்வேறு சிரமங்களுக்கிடையே தேடி வருகின்றனர். மேலும், பாறை குளத்தில் தாய் உட்பட மூன்று பேர் மூழ்கிய சம்பவம் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாறை குளத்தைச் சுற்றி நின்று கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.
மேலும், சிவரஞ்சனனின் உறவினர்களும் இறந்து போன குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனால், அப்பகுதியை பெரும்சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், சிவரஞ்சனி உட்பட நான்கு பேரும் தடுமாறி குளத்தில் விழுந்தார்களா…? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
This website uses cookies.