தமிழகம்

கட்டைப்பையில் குழந்தையின் சடலம்.. அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அவலம்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தை கட்டைப் பையில் கொடுத்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், மாரடபள்ளியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும், ஊத்தங்கரையைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், ரம்யா கர்ப்பம் ஆகி உள்ளார்.

பின்னர், நிறைமாத கர்ப்பிணியான ரம்யா, பிரசவத்திற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. ஆனால், குழந்தைக்கு உடல் நலக் குறைவு இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூறி உள்ளனர்.

இதனையடுத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து உள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் இதயம் மற்றும் மூளையில் பாதிப்பு இருப்பதாகக் கூறி உள்ளனர். இதனையடுத்து, கடந்த 5 நாட்களாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறி உள்ளனர். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ, குழந்தையை கட்டப்பையில் கொடுத்து உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மனம் உடைந்த அவர்கள், மருத்துவமனை வாசலிலேயே சாபமிட்டு வந்து உள்ளனர்.

இதையும் படிங்க: துணை முதலமைச்சரை பார்க்க நிர்வாணமாக சென்ற பெண் அகோரி.. திகைத்து நின்ற தொண்டர்கள்!

இது அங்கிருந்தோரை கண்கலங்கச் செய்து உள்ளது. சமீப காலமாக, பிரசவ நேரத்தின் போது அரசு மருத்துவமனைகளில் தாய் – சேய் இறப்பு ஏற்படும் செய்திகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சத்துடனே அரசு மருத்துவமனையை அணுகுகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

’செளந்தர்யா திட்டமிட்டு கொலை’.. மாளிகையே காரணம்.. பரபரப்பு கடிதம்!

தென்னிந்திய சினிமாவில் ஜொலித்து வந்த நடிகை செளந்தர்யா விபத்தில் மரணமடையவில்லை எனவும், அது திட்டமிட்ட கொலை என்றும் சிட்டிபாபு என்பவர்…

23 minutes ago

Fight பண்ணிட்டே இருங்கண்ணா.. சீமானுக்கு தைரியம் சொன்ன அண்ணாமலை.. எதற்காக தெரியுமா?

விட்றாதீங்கண்ணா, ஃபைட் (Fight) பண்ணிட்டே இருங்கண்ணா, ஸ்ட்ராங்கா (Strong) இருங்கண்ணா என சீமானுக்கு அண்ணாமலை தைரியம் கூறியுள்ளார். சென்னை: பாஜக…

1 hour ago

மாசி மாத இறுதியில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…

2 hours ago

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

15 hours ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

15 hours ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

16 hours ago

This website uses cookies.