Categories: தமிழகம்

எந்த குழந்தை இருந்தா என்னம்மா?.. கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? பாலினம் கண்டறியும் கும்பலை லெஃப்ட் ரைட் வாங்கிய அதிகாரி..!

பென்னாகரம் அடுத்த நெக்குந்தி அருகே கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பல் பிடிபட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் லலிதா என்ற இடைத்தரகர் மூலம், முறையான படிப்பறிவு இல்லாத கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர், கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பலை, சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையிலான குழுவினர், ஆளில்ல வீட்டில் பரிசோதனை செய்த போது சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில், தலா ரூ.13,000 வீதம் பெற்றுக் கொண்டு 4 பெண்களுக்கு, நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து, கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவித்துள்ளனர். இந்த முருகேசன் ஏற்கனவே, சட்டவிரோதமாக, கருக்கலைப்பு செய்ததால், கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து, கையும் களவுமாக சிக்கிய கும்பலிடம் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி கோபமாக பேசும் காட்சிகள் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. “ஒரு இழு இழுத்தேன்னா அவ்ளோதான்.. எத்தனை குழந்தைய இப்படி அழிச்சிருக்க? இனி நீ வெளியில் வர முடியாது என ஸ்கேன் செய்து சொல்லும் முருகேசன் இடம் அவர் கோபமாக பேசியுள்ளார். இடைத்தரகராக செயல்பட்ட பெண்ணிடம் கோபமாக பேசிய சாந்தி தொண்டை தண்ணி வத்த கத்துறோமே எந்த குழந்தையா இருந்தால் என்ன இந்த மாதிரி 20 புக் புரோக்கர்கள் இருக்கிறார்கள். உங்களை ஒழித்தால் தான் தர்மபுரி உருப்படும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

6 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

18 minutes ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

1 hour ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

1 hour ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

This website uses cookies.