தமிழகம்

பிஸ்கட் கொடுத்து கைக்குழந்தை கடத்தல்… தாயிடம் துருவித்துருவி விசாரணை!

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தையைக் கடத்தியதாக பெறப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை, கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் ஆரோக்கியதாஸ் – நிஷாந்தி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நிஷாந்த் கர்ப்பம் அடைந்து உள்ளார். இதனையடுத்து, கடந்த 44 நாட்களுக்கு முன்பு சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், நிஷாந்தி வீட்டிற்கு பெண் ஒருவர் கடந்த ஒரு வாரமாகச் சென்று வந்து உள்ளார். இவ்வாறு வரும் இவர், தாய், சேய்க்கு அரசாங்கத்தில் ஊட்டச்சத்துப் பொருட்களை வாங்கித் தருவதாகக் கூறி உள்ளார். இதன்படி, நேற்று (நவ.13) காலை 10 மணிக்கு மேல், நிஷாந்திச் வீட்டிற்கு சென்ற அப்பெண், தாயுடன் குழந்தையையும் ஆட்டோவில் அழைத்துச் சென்று உள்ளார்.

இவ்வாறு சென்ற போது, தியாகராய நகரில் உள்ள ஒரு இடத்தில் தாய் நிஷாந்தியிடமிருந்து குழந்தையை வாங்கி உள்ளார். தொடர்ந்து, குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி வருவதாக அப்பெண் கூறிவிட்டு, குழந்தையோடு சென்ரு உள்ளார். ஆனால், வெகு நேரம் ஆன பின்னரும் அப்பெண் வரவில்லை.

இதனால், அதிர்ச்சி அடைந்த நிஷாந்தி, அந்தப் பகுதியில் அந்தப் பெண்ணையும், தனது குழந்தையையும் தேடி உள்ளார். ஆனால், அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, உடனடியாக அருகில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதையும் படிங்க: அரசாங்கம் கட்டினால் தப்பில்லை.. மக்கள் கட்டினால் இடிப்பதா? ஸ்கோர் செய்த செல்லூர் ராஜூ!

இந்தப் புகாரை கண்ணகி நகர் போலீசாருக்கு மாம்பலம் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நிஷாந்தியிடம் ஆட்டோவில் ஏறிய இடம், யார் அந்த பெண் என்பது குறித்த தகவல்களை சேகரித்து குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், குழந்தை காணாமல் போனது குறித்து நிஷாந்தி கூறிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால், குழந்தை உண்மையாகவே கடத்தப்பட்டதா? அல்லது பணத்திற்காக விற்கப்பட்டதா உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சூனியத்தை எடுக்க அப்பெண் குழந்தையைக் கொண்டு சென்றதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hariharasudhan R

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

15 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

15 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

16 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

17 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

18 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

21 hours ago

This website uses cookies.