கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் டிசைன் இன்ஜினியரான ராஜேஷ். இவர் தனது மனைவி சுருதி, 10 வயது மகள் யக்சிதா ,தாய் பிரேமா ஆகியோருடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடியேறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று காலை அவரது மாமனாரான பாலன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவதாக பேசியுள்ளார்.தொடர்ந்து அவரது மாமனார் பாலன் அன்று இரவு ராஜேஷுக்கும் மகள் சுருதிக்கும் செல்போனில் தொடர்பு கொண்ட போது இருவரும் பதில் அளிக்காமல் இருந்துள்ளனர்.
மேலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமையும் அவர் செல்போனில் அழைத்தும் பதில் இல்லாததால் வீட்டின் உரிமையாளரான ஷீலா என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். இதை அடுத்து இன்று மாலை ஷீலா, ராஜேஷின் வீட்டின் கதவை தட்டிய பொழுது அங்கிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்துள்ளார்.
இதனால் பாலனுக்கு தகவல் அளித்த ஷீலா வடவள்ளி காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் உள்புறமாக தாழிட்ட கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கியபடி ராஜேஷ் கிடந்துள்ளார்.
மேலும் அங்கிருந்த கட்டிலில் மனைவி சுருதி, தாய் பிரேமா மற்றும் மகள் யக்சிதா ஆகியோரும் உடல் அழுகி நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். தொடர்ந்து நான்கு பேரின் சடலங்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேஷ் பல இடங்களில் கடன் பெற்று தற்போது கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததும் கடந்த வியாழக்கிழமை இரவு டோமினோஸ் உணவகத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து இரவு உணவு வாங்கியதும் தெரியவந்துள்ளது.
வியாழக்கிழமை இரவு டோமினோஸ் நிறுவன ஊழியர் இரவு உணவை வழங்கிய போது கடைசியாக ராஜேஷ் பார்த்ததாகவும் அதற்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே ராஜேஷ் தற்கொலைக்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்தும் அவருக்கு கடன் வழங்கி தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயல்பட்டது யார் என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.