சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி பிரசாரம் ஓய்ந்த நிலையில் சமூக வலைதள பிரசாரத்துக்கு அனுமதியில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலில் சமூகவலைதளம் மூலம் பிரசாரம் மேற்கொள்ளும் பாணியை பெரும்பாலான வேட்பாளர்கள் மேற்கொண்டனர்.
அதாவது வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களின் வாட்ஸ் அப் எண்களை பெற்று தங்களது வாக்குறுதிகளை வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்து வாக்காளர்களுக்கு அனுப்பி வைத்து ஆதரவு திரட்டினர்.
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பதிவிட்டும் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் தேர்தலுக்கான நேரடி பிரசாரம் ஓய்ந்தநிலையில் வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளவும், விளம்பரங்கள் செய்வதற்கும் அனுமதியில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சமூக வலைதளம் மூலம் பிரசாரம் மேற்கொள்வதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.