Categories: தமிழகம்

சாலையில் கிடந்த கட்டு கட்டா நோட்டு கட்டு : சிதறிக் கிடந்த ரூ.14 லட்சத்தை அள்ளிய மக்கள்… ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் கொடுத்த அதிர்ச்சி!!

வேலூரில் சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்த 500 ரூபாய் கட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் கொண்டவட்டம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள புதரில் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், 500 ரூபாய் கட்டுகளாக வீசப்பட்டு கிடந்தது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பண ஆசையில் ரூபாய் நோட்டுகளை அள்ளி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடி ஊழியர்கள், பணத்தை எடுத்தவர்களை தடுத்து நிறுத்தி, போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பண கட்டுக்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அது அனைத்து ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ளநோட்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்து நோட்டுகளிலும் சீரியல் எண்கள் 00 என உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கள்ள நோட்டுகளை தயாரித்து வீசியது யார் என சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் பள்ளிகொண்டா அருகே 14 கோடி ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில் நேற்று கொணவட்டம் பகுதியில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு இருப்பது வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மாத இறுதியில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…

54 minutes ago

Get out பதாகை.. பிரமாண்ட விருந்து.. புதிய அறிவிப்புகள்.. தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவின் Highlights!

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…

2 hours ago

குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…

3 hours ago

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

16 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

16 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

17 hours ago

This website uses cookies.