நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேனர் : சர்ச்சையில் சிக்கிய காவலர்.. பாய்ந்தது வழக்கு!!

பெரம்பலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றும் தலைமை காவலர் கதிரவன் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உயதநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியானது. இதில் ஏராளமான கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஆர்டிகிள் 15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இருந்தாலும் படத்தில் சிறு சிறு கதைக்களத்தை மாற்றி எடுத்துள்ளனர். படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பெரம்பலூரில் உள்ள ஆயுதப்படை பிரிவை சேர்ந்த தலைமை காவலர் கதிரவன் என்பர் நெஞ்சுக்கு நீதி படம் வெளியானதை முன்னிட்டு, முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக படத்துடன் கூடிய பேனரை வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காவலர்களுக்கு வார ஓய்வு, மகப்பேறு விடுப்பு 1 வருடம், காவல் ஆணையம் அமைத்தது, காவலர் குடியிருப்பு சென்று ஆய்வு மற்றும் குறைகளை கேட்டறிந்தது, எஸ்.ஐ.,களுக்கு மாதத்தில் 2 நாள் ஓய்வு அளிக்கப்பட்டது போன்ற காவலர் நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு சிறப்பாக முன்னெடுத்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து பேனரை வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் ப்ளக்ஸ் வைத்ததால் அவர்மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டம் செக்சன் 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை அலுவலகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

41 minutes ago

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

1 hour ago

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

1 hour ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

2 hours ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

15 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

16 hours ago

This website uses cookies.