நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேனர் : சர்ச்சையில் சிக்கிய காவலர்.. பாய்ந்தது வழக்கு!!

பெரம்பலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றும் தலைமை காவலர் கதிரவன் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உயதநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியானது. இதில் ஏராளமான கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஆர்டிகிள் 15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இருந்தாலும் படத்தில் சிறு சிறு கதைக்களத்தை மாற்றி எடுத்துள்ளனர். படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பெரம்பலூரில் உள்ள ஆயுதப்படை பிரிவை சேர்ந்த தலைமை காவலர் கதிரவன் என்பர் நெஞ்சுக்கு நீதி படம் வெளியானதை முன்னிட்டு, முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக படத்துடன் கூடிய பேனரை வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காவலர்களுக்கு வார ஓய்வு, மகப்பேறு விடுப்பு 1 வருடம், காவல் ஆணையம் அமைத்தது, காவலர் குடியிருப்பு சென்று ஆய்வு மற்றும் குறைகளை கேட்டறிந்தது, எஸ்.ஐ.,களுக்கு மாதத்தில் 2 நாள் ஓய்வு அளிக்கப்பட்டது போன்ற காவலர் நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு சிறப்பாக முன்னெடுத்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து பேனரை வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் ப்ளக்ஸ் வைத்ததால் அவர்மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டம் செக்சன் 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை அலுவலகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

11 minutes ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

56 minutes ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

12 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

13 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

14 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

14 hours ago

This website uses cookies.