வத்தலகுண்டு பேரூராட்சி சார்பில் பொங்கல் விழா உறியடி நிகழ்ச்சியில் தலைவரின் மண்டையைக் குறி வைத்த துணைத்தலைவரால் கலகலப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் இணைந்து பங்கேற்ற சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேரூராட்சி சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில் உரியடிக்கும் போட்டியில் துணைத் தலைவர் தர்மலிங்கம் கண்ணைக் கொட்டிக்கொண்டு உரியடிக்கும் களத்தில் இறங்கினார்.
ஆரவாரத்துடன் இலக்கை அடைந்த துணைத் தலைவர் நேராக பானை இருக்கும் பக்கம் செல்லாமல், சினிமா பட பாணியில் எதிரே நின்றிருந்த பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் நோக்கி சென்று, பானை இலக்கு வந்துவிட்டது என நினைத்து ஓங்கி அடிக்க தலைவர் ஒதுங்கிக் கொண்டார்.
அப்போது, அங்கு கூடி இருந்தவர்கள் சந்தடி சாக்கில் தலைவர் மண்டையை துணைத்தலைவர் உடைக்க பார்த்தார் என கூறியதால் அங்கு சிரிப்புடன் கூடிய ஆரவாரம் நிலவியது. கடைசியாக தலைவர், “ஏது என்றாலும் பேசி தீர்த்துக்கலாம். அதற்காக மண்டையை உடைக்கலாமா..?’ என கேட்டதால் அந்த இடத்தில் சிரிப்பொலி ஆனது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.