நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகைகளின் அந்தரங்க யூடியூப் சேனல்கள் மூலம் அவிழ்த்து விட்டு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவருக்கும் தயாரிப்பாளர் கே. ராஜனுக்கும் மிகப்பெரிய மோதலே ஏற்பட்டது. அதன் பின்னர் கே. ராஜன் பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து பாடகி சுசித்ரா பற்றி பயில்வான் அவதூறு கருத்து வெளியிட்டதாக பாடகி சுசித்ராவும் கமிஷனர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் ஒன்றை பதிவு செய்தார்.
அந்த புகாரில் 2017ம் ஆண்டு வெளியான சுச்சி லீக்ஸ் காரணமாக தனது வேலையே போயிடுச்சு என்றும் அதற்கு காரணம் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு எனக் குறிப்பிட்டு இருந்ததாகவும், தற்போது பயில்வான் ரங்கநாதன் தன்னைப் பற்றி இப்படி பேசக் காரணமே அவருக்கு பின்னால் இந்த மூவரும் இருப்பதாக சந்தேகிக்கிறேன் என புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், நடிகர்களின் அந்தரங்கங்களை வெளியிட்டதே சுசித்ரா தான் அதுதொடர்பான வழக்கே இன்னும் நிலுவையில் இருக்கு, அவரது கணவர் கார்த்திக் குமார் தான் மனநலம் சரியில்லை என ஜாமின் எடுத்தார் என்றும் இப்போ என் மீது புகார் கொடுத்து தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் சுசித்ரா என்றும் பயில்வான் ரங்கநாதன் விளாசி உள்ளார்.
மேலும், நடிகர் தனுஷ் எனக்கு காசு கொடுக்கிறாரா? அந்த அளவுக்கு நான் என்ன பெரிய ஆளா எனக் கேட்ட பயில்வான் ரங்கநாதன் இந்த பிரச்சனையில் அவரையும் இழுத்து விட்டு பெரிய சிக்கலில் மாட்ட உள்ளார் சுசித்ரா என பந்தாடி இருக்கிறார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.