தருமபுரி அருகே BDO அலுவலகத்தில் டெண்டர் நடைபெறும் போது மின்வெட்டு ஏற்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் நடைபெற்ற அவலம் அரங்கேறியுள்ளது.
பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா தலைமையில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், டெண்டர்கள் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.
மாலை 7 மணிக்கு இந்த டெண்டர் துவங்கிய சிறிது நேரத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் பணிகள் நடைபெற்றது.
பென்னாகரம், ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக கடுமையான தொடர் மின்வெட்டு இருந்து வருகிறது. இதன் காரணமாக வர்த்தகர்களும், பொதுமக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வரும் சூழ்நிலையில், டெண்டரின் போது வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.