சென்னை: ‘ழ’கரம் ஏந்திய தமிழணங்கு என்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற கவிதையில் வரும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை ஏ.ஆர்.ரகுமான் சுட்டிக்காட்டி பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோ ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருக்கிறார். அதில் ‘ழ’ கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே ‘தமிழணங்கு’ என்றும், புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
நேற்று நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37வது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்தி மொழியை வளர்ப்பது குறித்து விளக்கினார். இது தொடர்பாக பேசிய அவர், நாட்டின் ஒற்றுமையின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
பிற மொழிகளை பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள்ளே உரையாடும் மொழி, இந்திய மொழியாகவே இருக்க வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும், மாறாக உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாவிட்டால், அது பரவாது. மத்திய மந்திரி சபையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல்கள் தற்போது இந்தியில்தான் தயாரிக்கப்படுகின்றன.
8 வடகிழக்கு மாநிலங்களும், தங்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்க ஒப்புக்கொண்டு உள்ளன என்று அமித்ஷா தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே, ஏஆர் ரகுமான் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளனர். மேலும், இது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.