கோவை : யாசகம் கேட்பது போல் நூதன முறையில் தொழிலதிபரிடம் எட்டாயிரம் பணம் பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
கோவை பீளமேடு அடுத்து ஜி.ஆர்.ஜி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தொழிலதிபர் மரியா பிரதீப்(46). இவரது மகன் கொடிசீயா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி பள்ளியில் தனது மனைவியுடன் மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். இருவரும் பள்ளியின் முன் காரில் காத்திருந்த போது, அந்த வழியாக வந்த திருநங்கை ஒருவர் மரியா பிரதீப்-இடன் யாசகம் கேட்டுள்ளார்.
தனது கார் கண்ணாடியை திறந்த மரியா பிரதீப் தனது பர்சிலிருந்து பத்து ரூபாய் யாசகம் கொடுத்த நிலையில், அதனை பெற்றுகொண்ட திருநங்கை அங்கிருந்து நகர்ந்து தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டார்.
சிறிது நேரம் கழித்து தனது பர்ஸை பார்க்கும் போது அதில் இருந்த எட்டாயிரம் ரூபாய் மாயமாகி இருந்துள்ளது. இது தொடர்பாக மரியா பிரதீப் பீளமேடு போலீசில் புகார் அளித்தன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை இளன்வாஞ்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மரியா பிரதீப்-ன் தங்கை இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூகவளைதளங்களில் பதிவிட்டுள்ளது கோவையில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.