கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதி அருகே மர்ம நபர் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மருதமலை பகுதியில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் இரண்டாயிரத்து மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக நள்ளிரவில் வீடுகளுக்குள் புகும் வெளிநபர்கள், மாணவிகளின் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு மாணவிகளின் அறை கதவை தட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே கடந்த 31ஆம் தேதி பல்கலைக்கழக வாயிலின் முன் திரண்ட மாணவிகள், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பல்கலைகழக துணைவேந்தர் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் விடுதிகளில் வளாகத்தின் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர் எனவும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தரப்படும் எனவும் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்வர் எனவும் உறுதியளித்ததன் பேரில் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனிடையே மாணவிகள், விடுதி வளாகத்திற்குள் வெளிநபர் சுற்றித் திரிவதாக வெளியிட்ட புகைப்படத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர் விடுதி வளாகத்திற்குள் சுற்றித்திரியும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. விடுதி மாணவி ஒருவர் அந்த வீடியோவை பதிவு செய்ததுடன், இது தொடர்பாக வடவள்ளி போலீசாருக்கும் தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மர்ம நபரை தேடியதோடு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது அந்த வீடியோவானது வெளியாகி உள்ள நிலையில் அதில் மர்ம நபர் விடுதி கட்டடத்தின் அருகே நடந்து சென்ற விடுதியின் நுழைவு வாயிலை கடந்து செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. ஏற்கனவே வெளியான புகைப்படத்துக்கு பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…
ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…
கர்நாடக பெல்காவி மாவட்டத்தில் உண்டான மோதலையடுத்து, கன்னடம் - மராத்தி மொழி மோதல் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின்…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம்,…
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
This website uses cookies.