கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் கோவை தனியார் கல்லூரி MBA முதலாமாண்டு படிக்கும் 10 மாணவர்கள் ஒன்றாக குளிக்க சென்றனர். அவர்களில் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கனிஷ்க் (24), கரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜதுரை (24), கோவை சூலூர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் மகன் சுரேந்திரன் (24) ஆகியோர் எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களை தீயணைப்புத்துறையினர் பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் தேடி வந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் சாமண்ணா வாட்டர் டேங்க் அருகே ராஜதுரையும், வெள்ளிப்பாளையம் இரண்டாம் பவானி துணை மின் நிலையம் அருகே கனிஷ்க்கையும் குத்தாரிபாளையம் அருகே சுரேந்திரன் உடலையும் சடலமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட மூவரின் உடல்களும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறந்த மாணவர்களின் சடலத்தை பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.