தமிழகம்

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது தொடர்பான பணிகளும் நடந்து வருவதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் இன்னும் செயல்படவில்லை. இத்னிடையே தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மாட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கக்கூடும் என சய்திகளும் வெளியானது.

இதையும் படியுங்க: அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தது. அதானி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் விமர்சனத்தையும் முன் த்திருந்தனர். அதே சமயம் கடந்த டிசம்பர் மாதம் ஸ்மாட் மீட்டர் பொருத்துவதற்கான மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் ரத்து செய்தது.

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் ரத்து செய்யப்படுவதாக தமிழக மின்சார வாரியம் விளக்கமும் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அண்ணாமலை தனது X தளப்பக்கத்தில், ஒரு புதிய ஸ்மார்ட் மீட்டர் மோசடி தயார் நிலையில் உள்ளது என்றும், இதற்கு காரணம் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் செந்தில் பாலாஜி என குறிப்பிட்டுள்ளார். விரைவில் விபரம் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசு மீது டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட் மீட்டரில் மோசடி என அண்ணாமலை புகார் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

1 hour ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

1 hour ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

2 hours ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

3 hours ago

This website uses cookies.