வேடசந்தூர் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரூர் – திண்டுக்கல் நெடுஞ்சாலையில், வேடசந்தூர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே நாகம்பட்டியில் இருந்து வேடசந்தூருக்கு ஒரு இருசக்கர வாகனத்தில் மதன்குமார் மற்றும் வினோத் பாண்டி ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கலில் இருந்து வேடசந்தூர் நோக்கி வந்த கார் ஒன்று திடீரென சாலையை கடந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், காரின் மீது நேருக்கு நேராக மோதியுள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மதன்குமார் மற்றும் வினோத் பாண்டி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.