பழனி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு பழனி சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகள் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பழனி அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கே பழனி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டடப்பணிகள் நடந்து வருகிறது. சிகிச்சைக்காக வந்த ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மருந்து வாங்க சென்றிருந்தபோது, அங்கு பச்சை நிற வேட்டி அணிந்து மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பழனி நகர காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்த நபரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்ரோ பட விவகாரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "கங்குவா" படம் எதிர்பார்த்த அளவில்…
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக உள்ளவர் சல்மான் கான். இவர் நடிப்பில் சிக்கந்தர் படம் ரம்ஜானை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த…
ஏற்காடு மலைப்பாதையில், புது காதலி மற்றும் கல்லூரி காதலியுடன் சேர்ந்து 2வது காதலியைக் கொன்ற இளைஞர் உள்பட 3 பேரை…
ரிவர்ஸ் ஸ்விங் சிக்கல் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது அபாரமான பந்து வீச்சால் அனைவரையும் ஈர்த்து…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களின் இடங்கள் மற்றும் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி…
This website uses cookies.