கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருசக்கர வாகனம் மீது பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் இவர், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்சந்தை நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
குளச்சல் அரசு மருத்துவமனை அருகே வந்த போது, தர்மலிங்கம் தனது இருசக்கர வாகனத்தை சாலையின் வலது பக்கமாக செல்ல திருப்பியுள்ளார். அப்போது, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது வேகமாக மோதியது.
இதில் தர்மலிங்கம் இருசக்கர வாகனத்துடன் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இருசக்கர வாகனம் மீது பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.