கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருசக்கர வாகனம் மீது பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் இவர், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்சந்தை நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
குளச்சல் அரசு மருத்துவமனை அருகே வந்த போது, தர்மலிங்கம் தனது இருசக்கர வாகனத்தை சாலையின் வலது பக்கமாக செல்ல திருப்பியுள்ளார். அப்போது, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது வேகமாக மோதியது.
இதில் தர்மலிங்கம் இருசக்கர வாகனத்துடன் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இருசக்கர வாகனம் மீது பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…
தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…
விஜய்க்கு ஃபத்வா… விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
This website uses cookies.