நீலகிரி : ஆபத்தை உணராமல் யானை கூட்டங்களை வாகன ஓட்டிகள் சீண்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டம் சுமார் 60 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளிலிருந்து சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வன விலங்குகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால், அவ்வப்போது வனவிலங்கு மனிதர்களிடையே மோதல் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வருவது தொடர்கதையாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர், கெத்தை முள்ளி, காரமடை மார்க்கமாக செல்லக்கூடிய சாலை அடர்ந்த வனப்பகுதி ஒட்டியுள்ள சாலையாகும். இச்சாலையில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள நிலையில், காரமடை வழியில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மஞ்சூரில் இருந்து காரமடை செல்லும் சுற்றுலா பயணிகள், மிக கவனத்துடன் செல்ல வேண்டிய இச்சாலையில், ஒரு சிலர் இன்று கெத்தை மாரியம்மன் கோயில் அருகே 5 காட்டு யானைகள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக வந்த பைக் மற்றும் கார்களை வைத்துக்கொண்டு ஆபத்தை உணராமல் காட்டு யானைகளுடன் விளையாடியுள்ளனர். காரை பின்நோக்கி செலுத்திய படி புகைப்படம் எடுத்து கொண்டு, மீண்டும் முன்னோக்கி கார் வரும் போது, கூட்டத்தில் இருந்த யானை ஒன்று காரை தாக்கும் விதமாக வருவது பார்ப்போரை அச்சத்தில் ஆழ்த்துகிறது.
காட்டு யானை கூட்டத்துடன் வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் வாசிகள், விளையாடும் சம்பவம் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனவே, வனத்துறையினர் இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.