கோவை ; பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவிட்டதாக திமுகவினர் மீது பாஜகவினர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை பெரிய கடை வீதி பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி பாபு (எ) கணேஷ் பாபு. இவர் பா.ஜ.க கோவை மாநகர மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
அதில், சமூக வலைத் தளங்களை பார்த்துக் கொண்டு இருந்த போது, அதில் பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பற்றி திமுகவினரும், அவர்களுக்கு ஆதரவாக சிலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆபாசமாகவும், அருவருக்க தக்க வகையிலும், பெண்மையை கொச்சைப்படுத்தும் வகையிலும், இருபால் இனத்தவர் இடையே கலவரத்தை துண்டும் வகையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை பற்றி அவதுறுகளையும் பதிவு செய்து வருகிறார்கள்.
ஒரு பெண்ணை கீழ்த்தரமாக அவரது கற்பை பற்றி கேவலமாக விமர்சித்தும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மிகவும் மோசமான அநாகரிகமான பதிவுகளை பெண் உரிமைக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு உள்ளார். மேற்படி பதிவுகள் சம்பந்தமாக தங்களது கருத்துக்களை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசி கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
சமூக வலைதளமான ட்விட்டர், முகநூல் பக்கம் மூலம் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் இடையே பகைமையும், வெறுப்பு உணர்வையும் தூண்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் எதிராகவும், இரு பால் இனத்தவர் இடையே கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற எண்ணம் கெட்ட எண்ணத்திலும், ஒரு பெண்ணை மக்கள் பிரதிநிதி என்று கூட பாராமல் அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும் மேற்படி பதிவுகளை பதிவு செய்து வருகிறார்கள்.
எனவே, மேற்படி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
விட்றாதீங்கண்ணா, ஃபைட் (Fight) பண்ணிட்டே இருங்கண்ணா, ஸ்ட்ராங்கா (Strong) இருங்கண்ணா என சீமானுக்கு அண்ணாமலை தைரியம் கூறியுள்ளார். சென்னை: பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
This website uses cookies.