அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு நீட் விலக்கு கையெழுத்து முகாம் நடத்திய தி.மு.க வினரை முற்றுகையிட்டு பா.ஜ.க வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு அவிநாசி ஒன்றிய தி.மு.க சார்பாக நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடர்பாக கையெழுத்து பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, டேபிள் வைத்து நீட் எதிர்ப்புக்கு விருப்பமுள்ள மாணவ, மாணவிவிகளிடம் கையெழுத்து பெற்று கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் தி.மு.க வினர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கையெழுத்து பெற்றுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, கல்லூரி முன்பு இந்த முகாம் நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.கவினர் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.கவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த அவிநாசி காவல் துறையினர், இரு தரப்பினர் இடையே சமாதானம் செய்து வைத்து பா.ஜ.க. வினரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, உரிய அனுமதி பெற்று பிறகு கல்லூரி முன்பு முகாம் நடத்துமாறு தி.மு.க வினருக்கும் அறிவுத்தி அனுப்பி வைத்தனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.