பழனி அருகே முத்தனம் பட்டியில் ரேக்ளா பந்தயம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
பழனி அருகே முத்தனம் பட்டி கிராமத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று பாரதி ஜனதா கட்சியின் சார்பில் ரேக்ளா ரேஸ் பந்தயம் நடைபெற இருந்தது. இதற்காக முத்தனம் பட்டியில் ரேக்ளா ரேஸ் பந்தயத்தை பொதுமக்கள் காண பார்வையாளர்கள் ஸ்டேடியம், சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைப்பது, என பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது அங்கு வந்த போலீசார் பல்வேறு காரணங்கள் கூறி ரேக்ளா ரேஸ் பந்தயம் நடைபெறுவதற்கு அனுமதி இல்லை என கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி தர வேண்டும் என கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் இணையும் அனுபமா – சமந்தா பிரவின் கந்த்ரேகுலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பரதா" திரைப்படத்தில் பிரபல நடிகை சமந்தா கேமியோ…
சிப்பிக்குள் முத்து படத்தில் அல்லு அர்ஜுன் நடிகர் கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்த ஒருவர் தற்போது பான் இந்திய ஹீரோவாக கலக்கி…
மர்மர் படம் – சர்ச்சையின் மையம் இந்தியாவின் முதல் Found Footage ஹாரர் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட மர்மர் திரைப்படம்…
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தினர். சென்னையில்…
மருத்துவமனை அறிக்கை – சிறுவனின் உடல்நிலை புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின்போது ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திர அறிமுகமனார். இவரின் தாயார் மேனகா, தமிழ், தெலுங்கு, மலையாளம்…
This website uses cookies.