வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி 500 க்கும் மேற்பட்ட பா.ஜ.க வினர் மாநகராட்சி அலுவலகத்தில் நுழைந்து மேயர் அறையை இன்று முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு சுமார் 1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அனைத்து வார்டுகளும் முறையான கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாளா சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த பணிகள் மிக மிக மோசமாக நடந்து வருவதாக கூறி, வேலூர் மாநகராட்சியை கண்டித்து இன்று பா.ஜ.க வினர் வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போலீஸ் பாதுகாப்பையும் மீறி பேரிக்கார்டுகளை உடைத்து எறிந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு உள்ளேயே நுழைந்து மேயர் சுஜாதா அறையை முற்றுகையிட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேயர் அறையை முற்றுகையிட்ட நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை வந்து விடாக் கூடாது என்பதற்காக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் மாநகராட்சி அலுவலகத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய் உத்தரவிட்ட நிலையில் பா.ஜ.க வினர் கைது செய்யப்பட்டனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.