அன்னூர் அருகே கெம்ப நாயக்கன் பாளையம் அரசு பள்ளியில் நடந்த வாக்குப்பதிவில் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காரேகவுன்டம்பாளையம் ஊராட்சி கெம்ப் நாயக்கன் பாளையம் அரசு பள்ளியில் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி காலை முதல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வாக்கு பதிவு மையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் தனது வாக்கினை பதிவு செய்ய தன்னுடைய பேரனுடன் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றுள்ளார்.
மேலும் படிக்க: வாக்களிக்க வந்த இரண்டு பேர் மயங்கி விழுந்து பலி… வாக்குச்சாவடியில் பரபரப்பு ; விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!!
அப்போது, அங்கு சென்றபோது தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகளிடம் மூன்றாவது பட்டனை அழுத்தி பா.ஜ.கவுக்கு வாக்களிக்க சொல்லியுள்ளார். ஆனால், அங்கு பணியில் இருந்த அதிகாரி, திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், திமுக வேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்டன் அழுத்தியதாக புகார் எழுந்தது.
இது சம்பந்தமாக பா.ஜ.கவை சேர்ந்த நிர்வாகிகள் வாக்கு சாவடிக்கு சென்று அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உடனடியாக அங்கு பாஜக வேட்பாளர் எல்.முருகனும் வந்தார்.
சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு பணியில் இருந்த பெண் அதிகாரியிடம் தேர்தல் அதிகாரிகள் முறையாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்த வேண்டும். ஒருதலை பட்சமாக செயல்பட்டால், அது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம், என எச்சரித்தார்.
இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சரும், வேட்பாளருமான எல்.முருகன் தேர்தலில் ஈடுபடும் அதிகாரிகள் எப்போதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அதனை மீண்டும் ஒருமுறை இந்த வாக்குச்சாவடியில் அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட அந்த தேர்தல் அதிகாரி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எல். முருகன் தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.