தென்காசி: கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிடும் கர்ப்பிணியான பா.ஜ.க வேட்பாளர் பிரச்சாரத்தின் போது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரத்தை சேர்ந்தவர் ரேவதி. இவர் கடையநல்லூர் நகராட்சி 1வது வார்டு பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், கணவர் மற்றும் கட்சி தொண்டர்களுடன் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதை அறிந்த அப்பகுதி வாக்காளர்கள் வேட்பாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.