திருச்சியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டதால் பாஜக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் பிரதமர் மோடியை வாழ்த்தி பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேனரை சில மர்ம நபர்கள் கிழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பகுதிச் செயலாளர் பரமசிவம் மற்றும் பாஜகவினர் குவிந்து திமுகவினர் தான் கிழித்தினர் எனக்கூறி கோஷமிட்டனர்.
இதை கண்ட திமுகவினர் மற்றும் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். அங்கு திமுகவினரும் திடீரென மாநகராட்சியில் எந்தவித அனுமதியும் பெறாமல் திடீரென ஒரு கொடிக் கம்பத்தை ஊன்றினர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அப்போது, திமுகவினர் இந்த இடத்தில் எந்த அனுமதியும் வாங்கவில்லை என கூறி பேனரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். பாஜகவினரும் எந்த அனுமதி இல்லாமல் திடீரென இங்கு திமுகவினர் கொடிக்கம்பத்தை வைத்துள்ளார்கள் என கூறினர்.
இந்நிலையில், திமுக மற்றும் பாஜக கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த அந்து பேனரை அப்புறப்படுத்தினர். திமுகவினரால் வைக்கப்பட்ட கொடி கம்பத்தையும் அப்புறப்படுத்தினர்.
பாஜக, திமுகவினரின் மோதல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, திருச்சி மாவட்ட பாஜக சார்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த முதல் குழந்தைக்கு திருச்சி மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாலன்ஜி தங்க மோதிரம் அணிவித்து பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.