திருவாரூரில் சமூக வலைதள பக்கத்தில் திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்களை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்ட பாஜக மாவட்ட துணை தலைவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்களை பற்றி முகநூல் வலைதள பக்கத்தில் Sadha Sathish Bjp என்ற Facebook பக்கத்தில் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ, புகைப்படம் மற்றும் கருத்துகள் பதிவிடப்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட, தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் என்பவர் திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் தொடர்பாக திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் படி, குற்றவாளியை பிடிப்பதற்கு திருவாரூர் திருவாரூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டது தொடர்பாக Sadha Sathish Bjp என்ற Facebook பக்கத்தை ஆய்வு செய்து வந்தனர்.
இவ்வாறு தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையிலான கருத்துகளை பதிவிட்டு வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுக்கா, கிளேரியம், கப்பலுடையான், தெற்கு தெருவை சேர்ந்த சதாசிவம் மகன் சதீஷ்குமார் @ சதா சதீஷ் (திருவாரூர் மாவட்ட பாஜக துணை தலைவர்) கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி 23ந்தேதி வரை நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் வைக்கப்பட்டார்.
மேலும், சமூக வலைதள பக்கங்களில் இதுபோன்ற அவதூறு பரப்பும் வகையிலும், சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடுவோர் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.