சிவகாசியில் பாஜக மாவட்ட செயலாளர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 42). விருதுநகர் பாஜகவின் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளராக உள்ளார்.
இவர் திருத்தங்கல்லில் ஜவுளிக்கடை நடத்தும் ஈஸ்வரனிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி 51 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், திருத்தங்கல் போலீஸாரால் சத்யராஜ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் ஜாமீனில் வெளி வந்த சத்யராஜ் இன்று திருத்தங்கல் காவல் நிலையம் முன்பாக உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடலில் தீப்பற்றிய உடன் மேலாடையை கழற்றியதால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
தீக்குளித்த அவரை மீட்ட போலீசார் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 30 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன் மீது பொய் வழக்கு தொடுத்து தன்னை கைது செய்துள்ளதாகவும், தமிழக அரசு தமக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் எனவும் தீக்குளித்த சத்யராஜ் பேட்டி அளித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.