பாஜக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்.. வேலூர் அருகே பரபரப்பு : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று தமிழக பா.ஜக. தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்க திருப்பத்தூர் முதல் ஜோலார்பேட்டை வரை பா.ஜனதா கொடிக்கம்பங்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் திருப்பத்தூருக்கு வந்த அண்ணாமலை திருப்பத்தூர் – புதுப்பேட்டை கூட்ரோட்டில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது திடீரென 50 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் ஒன்று சரிந்து கீழே விழுந்தது. இதில் அங்கு நின்றிருந்த திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த கலீல் (வயது 54) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பத்தூரில் கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயமடைந்த நிலையில், பா.ஜ.க நிர்வாகி சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
This website uses cookies.