வங்கி மேலாளரை தாக்கிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்த நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இணைந்த ஏடிஎம் மையத்தில் பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் (35) பணம் எடுக்க நேற்று சென்றுள்ளார். அப்போது, அந்த ஏடிஎம் மையத்தில் டெல்லியிலிருந்து வந்திருந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஏடிஎம் மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது. அபிலேஷ் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்தி இருக்கின்றார். இதனால் வங்கி ஊழியர் மெஷின் சர்வீஸ் செய்வததாகவும். பணம் எடுக்கக் கூடாது என கூறியுள்ளார். அதை மீறியும் அபிலேஷ் ஏடிஎம் கார்டை போட்டு உள்ளார். இதை பார்த்த வங்கி உதவி மேலாளர் பிரதீப் வந்து கேட்டபோது, வங்கி உதவி மேலாளரை அசிங்கமாக திட்டி கைகளால் அபிலேஷ் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மனவள நகர் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிலேஷை கைது செய்து ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தன். பின்னர், கைது செய்யப்பட்ட பாஜக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலேஷை திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்து விடுதலை செய்தது.
இந்த நிலையில், வங்கி ஏடிஎம்மிற்குள் மெஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது பணம் எடுக்க முடியாது என கூறிய வங்கி மேலாளரை தாக்கிய பாஜக பிரமுகரால் பரபரப்பு வங்கி மேலாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.