கோவை மைல்கல் அருகே உள்ள வனப்பகுதிக்கு சொந்தமான பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பதாக பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தன் வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது :- கோவையில் இருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் செல்வதற்காக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கிராவல் மண் தேவை அதிகமாக உள்ளது. இவங்களே கிராவல் மண் ஒருலோடுக்கு ரூ.500 அல்லது ரூ.600 கமிஷன் வைத்து விற்பதால் கிராவல் மண் விலை அதிகமாக உள்ளது.
அரசாங்க புறம்போக்கு இடத்தில் மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி கொடுத்ததா சொல்றாங்க. ஆனால், 1 மீட்டருக்கு அதிகமாக எந்த அதிகாரியும் அனுமதி தர மாட்டங்க. ஆனால், இங்கு 20 முதல் 30 அடி வரை மண் எடுத்திருக்காங்க.
ஆனால், இங்கு மலையை குடைந்து வனப்பகுதிக்குள் மண்ணை எடுத்து வருகின்றனர். ஒரு விவசாயி வனப்பகுதியில் ஒரு சட்டி மண் எடுத்தாலே சிறையில் போட்டுருவாங்க. இது யானை வழிப்பாதை. இங்கு இதுபோன்று மண் எடுத்தால், மனித – விலங்குகள் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஒருவேளை மண் எடுக்க அரசு அனுமதி கொடுத்தால், சட்டவிதிகளை பின்பற்றி மண் எடுக்க வேண்டும். மீறி மண் எடுக்கப்பட்டு உறுதியானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.