கோவை மைல்கல் அருகே உள்ள வனப்பகுதிக்கு சொந்தமான பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பதாக பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தன் வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது :- கோவையில் இருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் செல்வதற்காக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கிராவல் மண் தேவை அதிகமாக உள்ளது. இவங்களே கிராவல் மண் ஒருலோடுக்கு ரூ.500 அல்லது ரூ.600 கமிஷன் வைத்து விற்பதால் கிராவல் மண் விலை அதிகமாக உள்ளது.
அரசாங்க புறம்போக்கு இடத்தில் மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி கொடுத்ததா சொல்றாங்க. ஆனால், 1 மீட்டருக்கு அதிகமாக எந்த அதிகாரியும் அனுமதி தர மாட்டங்க. ஆனால், இங்கு 20 முதல் 30 அடி வரை மண் எடுத்திருக்காங்க.
ஆனால், இங்கு மலையை குடைந்து வனப்பகுதிக்குள் மண்ணை எடுத்து வருகின்றனர். ஒரு விவசாயி வனப்பகுதியில் ஒரு சட்டி மண் எடுத்தாலே சிறையில் போட்டுருவாங்க. இது யானை வழிப்பாதை. இங்கு இதுபோன்று மண் எடுத்தால், மனித – விலங்குகள் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஒருவேளை மண் எடுக்க அரசு அனுமதி கொடுத்தால், சட்டவிதிகளை பின்பற்றி மண் எடுக்க வேண்டும். மீறி மண் எடுக்கப்பட்டு உறுதியானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.