‘CM ஸ்டாலினுக்கு உரிய பாடம் புகட்டப்படும்’ ; பாஜக பிரமுகருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு… பாஜவினர் மறியல்!!

மதுரை ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக பாஜக தகவல்தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் SG சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை நாடாளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறித்தும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும். இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையி்ல. கடந்த 7ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக கூறி பாஜக தகவல்தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் SG சூர்யா மீது குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 12ஆம் தேதியன்று முன்பாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் மதுரை மாநகர காவல் துறை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர சைபர்கிரைம் காவல்துறையினரால் சென்னையில் வைத்து பாஜக மாநில செயலாளர் SG சூர்யாவை நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இன்று காலையில் SG சூர்யாவை ரேஸ்கோர்ஸ் காலனி நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, 3 மணி நேரமாக இரு தரப்பினரும் வாதங்களை எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து, வாதங்களை கேட்டறிந்த நீதிபதி SG சூர்யாவை ஜூலை 1 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, SG சூர்யாவை மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைத்தனர். நீதிமன்ற காவல் அளிக்கப்பட்ட நிலையில் நீதிபதி வீட்டின் முன்பாக பாஜகவினர் சிறிதுநேரம் காவல்துறையினர் வாகனத்தை மறைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, காவல்துறையினர் மற்றும் திமுக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, காவல்துறையினர் அவர்களை கலைய செய்தனர்.

முன்னதாக, நீதிபதி வீட்டின் முன்பாக SG சூர்யாவை ஆஜர்படுத்தபட்டபோது ஏராளமான பாஜகவினர் கூடியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவி ஆணையர் சூரக்குமரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தனர்.

சிறைக்கு அழைத்து சென்றபோது வாகனத்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, ஸ்டாலினுக்கு உரிய பாடம் புகட்டப்படும் என்றார்.

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்த விவகாரம் திமுக – பாஜக இடையே வார்த்தை மோதலை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பரும், பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான SG சூர்யா கைது செய்யப்பட்டது சிறையில் அடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

39 minutes ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

1 hour ago

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…

2 hours ago

ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…

3 hours ago

அந்த மாதிரி ஐடியா இல்லங்க.. ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்தியா படைத்த மொத்த சாதனைகள்!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…

4 hours ago

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

19 hours ago

This website uses cookies.