Categories: தமிழகம்

கூடலூரில் குவிந்த பாஜகவினர் : டான்டீ நிர்வாகத்தை மூடுவதை கண்டித்து அண்ணாமலை தலைமையில் இன்று போராட்டம்..!!

இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அவர்களின் வாழ்வாதரத்திற்காக டான்டீ நிர்வாகமும் உருவாக்கப்பட்டது.
அவர்கள் அந்த தொழிலை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர், கோத்தகிரி, கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் பராமரிப்பு இல்லாத தேயிலை தோட்டங்களை தமிழ்நாடு தோட்ட கழகம்(டான்டீ) வனத்துறைக்கு ஒப்படைத்ததுடன், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்யும்படி நோட்டீசும் ஒட்டியுள்ளது.

மேலும் டான்டீ நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று, நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கு அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் இந்த தொழிலை நம்பி இருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அ.தி.மு.க சார்பில் சில தினங்களுக்கு முன்பு வால்பாறையில் உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இந்தநிலையில் டான்டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், தமிழ் குடும்பங்களை மீண்டும் அகதிகள் ஆக்குவதை கண்டித்தும் பா.ஜ.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.

ஆர்ப்பாட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கோவை பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் கூடலூர் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட பா.ஜ.கவினர் செய்து வருகின்றனர்.

பா.ஜ.க போராட்டத்தையொட்டி கூடலூர் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விரக்தியில் வெங்கட் பிரபு எடுத்த முடிவு…சாதகமாக அமையுமா..!

"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…

8 hours ago

ரிலீஸ் ஆனது ‘குட் பேட் அக்லி’ தீம் மியூசிக்..ரிப்பீட் மோடில் கேட்கும் ரசிகர்கள்.!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…

8 hours ago

ரசிகர்களின் ஆறாத வடு..25 வருடத்திற்கு முன்னாடி நடந்த சம்பவம்..பதிலடி கொடுக்குமா இந்தியா.!

இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…

9 hours ago

6 மாசத்துக்கு எதுவும் கேட்காதீங்க.. திடீரென மாறிய தமிழிசை முகம்!

பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…

10 hours ago

போராடும் ‘காக்கா முட்டை’ பட சிறுவன்…கனவு நிறைவேறுமா.!

பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…

10 hours ago

செங்கல் சூளையில் கேட்ட அலறல் சத்தம்.. தப்பியோடிய காதல் கணவர்!

திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…

11 hours ago

This website uses cookies.