Categories: தமிழகம்

பாஜக பிரமுகர் தலைமறைவு… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு : கைது செய்ய தீவிரம் காட்டும் போலீஸ்!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நண்பராக இருப்பவர் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, இவர் தனது சமூக வலைதளத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார். மேலும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. எனவும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார், சென்னையில் வைத்து எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து ஜாமின் கோரி எஸ்.ஜி. சூர்யா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது, மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டும் படி நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லையென கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் எஸ்.ஜி.சூர்யாவை தேடி வரும் நிலையில், . சமீபத்தில் அவர் டெல்லிக்கு சென்று அங்கே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தீட்சிதர்கள் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது.

மேலும் சிதரம்பரம் கோயில் தீட்சிதர் பூணுலை காவல்துறையினர் அறுத்ததாக சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த பதிவு தொடர்பாக எஸ்.ஜி.சூர்யாவிடம் விசாரணை நடத்த சிதம்பரம் போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக மதுரையில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி எஸ்.ஜி சூர்யா தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

எனவே ஜாமின் நிபந்தனையை மீறியதாக எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் கைது செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மூத்த நடிகைகள் தான் வேணும்… அடம் பிடிக்கும் இளம் நடிகர் : கதறும் தயாரிப்பாளர்கள்!

பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…

25 minutes ago

‘STR 50’ கைவிடப்பட்டதா…இயக்குனர் தேசிங் பெரியசாமி சொல்லுவது என்ன.!

யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…

28 minutes ago

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு? அதிரடி அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…

1 hour ago

உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!

BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…

1 hour ago

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…

2 hours ago

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…

3 hours ago

This website uses cookies.