திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களின் சொத்து மதிப்புதான் உயரும்… மக்களுக்கு எந்த பயனும் இல்ல ; அண்ணாமலை
திமுக கவுன்சிலர் தேர்தல் போல் பிரச்சாரம் செய்வதாகவும், அதிமுக மாநில தேர்தல் போல் பிரச்சாரம் செய்வதாகவும் கூறிய அண்ணாமலை, மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்யவில்லை என விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறக் கோரி இன்று ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே மணிகுண்டு பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.
திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, பொதுமக்களிடம் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன் பின் பேசிய அண்ணாமலை கூறியதாவது :- திமுக செய்த சாதனையே ₹3.50 லட்சம் கோடி கடன் வாங்கியது தான், நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் தான். திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் செய்வோம் என்று கூறி ஏமாற்றி வருபவர்கள் தான் திமுக. பொய் பேசுவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்கவேண்டும் என்றால், அது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை 20% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மக்களிடம் பொய் கூறுகிறார்கள். திமுக கவுன்சிலர் தேர்தல் போல் பிரச்சாரம் செய்கிறது. அதிமுக மாநில தேர்தல் போல் பிரச்சாரம் செய்கிறார்கள். மத்தியில் யாரும் ஆட்சிக்கு வரவேண்டும் என இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்யவில்லை.
திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு மனைவியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 350% சொத்து உயர்ந்துள்ளது, இது தான் திமுக வெற்றி பெற்றால், அவர்களின் சொத்து மதிப்பு தான் உயருமே தவிர, மக்களின் வாழ்வாதாரம் உயராது, என தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.