பாஜக பிரமுகர் விஷம் அருந்தி தற்கொலை… மன உளைச்சல் கொடுத்த அதிகாரிகள் : குடும்பத்தினர் பகீர் புகார்!!
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சங்குப்பட்டி ஊராட்சி தலைவர் ராதா பாஜக அறிவுசார் பிரிவு மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
அவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராதா விஷமருந்து தற்கொலைக்கு முயன்றார்.
மயக்க நிலையில் இருந்து அவரை குடும்பத்தினர் மீட்டு சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராதா நேற்று உயிரிழந்தார். இது குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஊராட்சியில் பல்வேறு பணிகளுக்காக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நிதி ஒதுக்காததால் தனது சொந்த பணத்தில் இருந்து பணிகளை மேற்கொண்ட ராதா, தொட்ந்து பணம் ஒதுக்காததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம் என உறவினர்கள் காவல்துறையிடம் தெரிவித்ததுள்ளதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நயன்தாராவால் வந்த வினை விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு…
அண்மையில் திடீர் என விஜே பிரியங்கா பிரபல DJ வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் முக்கிய…
மனைவியிடம் கேட்ட சரத்குமார்? கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை…
விஜய் டிவியில் பாப்புலரான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பவித்ரா லட்சுமி. இவர் நாய் சேகர் உள்ளிட்ட…
பிக்பாஸ் ஜோடி பிரபல சின்னத்திரை நட்சத்திரமான பாவனி “பிக் பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபோதுதான் முதன்முதலாக அமீரை…
இழப்பீடு கேட்ட இளையராஜா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் ஆங்காங்கே பல காட்சிகளில்…
This website uses cookies.