பாஜக பிரமுகர் விஷம் அருந்தி தற்கொலை… மன உளைச்சல் கொடுத்த அதிகாரிகள் : குடும்பத்தினர் பகீர் புகார்!!
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சங்குப்பட்டி ஊராட்சி தலைவர் ராதா பாஜக அறிவுசார் பிரிவு மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
அவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராதா விஷமருந்து தற்கொலைக்கு முயன்றார்.
மயக்க நிலையில் இருந்து அவரை குடும்பத்தினர் மீட்டு சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராதா நேற்று உயிரிழந்தார். இது குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஊராட்சியில் பல்வேறு பணிகளுக்காக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நிதி ஒதுக்காததால் தனது சொந்த பணத்தில் இருந்து பணிகளை மேற்கொண்ட ராதா, தொட்ந்து பணம் ஒதுக்காததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம் என உறவினர்கள் காவல்துறையிடம் தெரிவித்ததுள்ளதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.