நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்.
சென்னை: இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனலிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருகிறது. ஆனால், இதனைப் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை.
இதற்கு காரணம், தலைமை சரியில்லை என்று நினைக்கிறேன். கட்சியின் தலைவர்கள் அதற்கான கட்டுப்பாடுகளை வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை அதைச் செய்வதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தற்போது வராது. எனவே, அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
ஜிஎஸ்டி வரியை அழிக்க வேண்டும். அதனை முட்டாள்தனமாக கொண்டு வந்து உள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியாது. அவர் துறை சார்ந்த அதிகாரிகள் மொத்தமாக எழுதிக் கொடுப்பர். அதனையே அவர் பேசுவார்” எனத் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, “நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றப்பட்டால் நானே நீதிமன்றத்திற்குச் செல்வேன். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் தேர்தல் செலவு குறையும் என்பதை நம்புபவர்கள் மக்கு. ரஷ்யா மற்றும் சீனாவில் ஒரே இடத்தில் இருந்து ஆட்சி அதிகாரம் செய்யலாம் என்பது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் அது நடக்காது” என சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே கூறி இருந்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் சினிமாவை மிஞ்சிய சேசிங்… வனப்பகுதிக்குள் சிக்கிய கார்..!!
சமீபத்தில், நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இதன் மீதான விவாதம் நடைபெறும். மேலும், சமீபத்தில் பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரை உயர்த்தப்பட்டது.
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
This website uses cookies.