அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்த பாஜக பிரமுகர்… லட்சக்கணக்கில் மோசடி : பதவியை பறித்த அண்ணாமலை!
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகனுக்கு வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பாஜக திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரன் என்பவர் பல கட்டங்களாக ரூ.2.65 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
ஆனால், இதுவரை வேலை வாங்கித் தராத நிலையில், பணத்தை திருப்பி கேட்டுள்ளார் சாந்தி. ஆனால், ராஜேந்திரன் பணத்தை திருப்பி தராததால் சாந்தி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்த பாஜக நிர்வாகி ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்தவள்ளி என்பவரிடமும் இதேபோல ராஜேந்திரன், அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
பாஜக நிர்வாகி மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட பாஜக திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரனின் கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டை ராஜேந்திரன், கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால், அவர் மாவட்ட பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பஜாக திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.